திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே
மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை,
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்-
பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி