திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: வியாழக்குறிஞ்சி

துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி,
மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த,
சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா,
பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி