பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால் விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை; அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி, இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!