பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை, பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை, நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!