பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம் தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை; வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!