பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!