பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை, நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்; மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!