நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு, நிலை தளர
ஆயிரம் மா முகத்தினோடு
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயிலக் கண்டு, பட
அரவும் பனி மதியும் வைத்த செல்வர்-
தாம் திருத்தித் தம் மனத்தை ஒருக்காத் தொண்டர்! தனித்து
ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம்
“பூந்துருத்தி பூந்துருத்தி” என்பீர் ஆகில், பொல்லாப்
புலால்-துருத்தி போக்கல் ஆமே.