விடம், மூக்கப் பாம்பே போல், சிந்தி, நெஞ்சே! வெள்
ஏற்றான் தன் தமரைக் கண்டபோது
வடம் ஊக்க மா முனிவர் போலச் சென்று,
மா தவத்தார் மனத்து உளார், மழுவாள் செல்வர்,
படம் மூக்கப் பாம்பு அணையில் பள்ளியானும்
பங்கயத்து மேல் அயனும் பரவிக் காணா,
“குடமூக்கே குடமூக்கே” என்பீர் ஆகில்,
கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குறுகல் ஆமே.