தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார், தாரம், ஆர்?
புத்திரர் ஆர்? தாம் தாம் ஆரே?
வந்த ஆறு எங்ஙனே? போம் ஆறு ஏதோ? மாயம்
ஆம்; இதற்கு ஏதும் மகிழ வேண்டா!
சிந்தையீர்! உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின்: திகழ்
மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் “நமச்சிவாய” என்று எழுவார்க்கு
இரு விசும்பில் இருக்கல் ஆமே.