தண் காட்ட, சந்தனமும் தவள நீறும்; தழை அணுகும் குறுங்
கொன்றை மாலை சூடி;
கண் காட்டா, கருவரை போல்-அனைய காஞ்சிக் கார் மயில்
அம் சாயலார் கலந்து காண;
எண் காட்டாக் காடு அங்கு இடமா நின்று(வ்) எரி வீசி; இரவு
ஆடும் இறைவர் மேய
“வெண்காடே வெண்காடே” என்பீர் ஆகில், வீடாத
வல்வினை நோய் வீட்டல் ஆமே.