ஊற்றுத்துறை ஒன்பது உள்-நின்று ஓரீர்; ஒக்க அடைக்கும்
போது உணர மாட்டீர்;
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடாமுன்னம், மாயம் மனை
வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்!
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்
அழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
“சோற்றுத்துறை சோற்றுத்துறை” என்பீர் ஆகில், துயர்
நீங்கித் தூ நெறிக்கண் சேரல் ஆமே.