தொழுதுபின் செல்வ தயன்முதற் கூட்டம் ;
தொடர்வன மறைகள்நான் ; கெனினும்
கழுதுறு கரிகா டுறைவிடம் ; போர்வை,
கவந்திகை கரியுரி ; திரிந்தூண் ;
தழலுமிழ் அரவம் கோவணம் ; பளிங்கு
சபவடம் சாட்டியக் குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்கேழ்
இருக்கையில் இருந்தஈ சனுக்கே.