சித்தனே, அருளாய் ; செங்கணா, அருளாய் ;
சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே, அருளாய் ; அமரனே, அருளாய் ;
அமரர்கள் அதிபனே, அருளாய் ;
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே, அருளாய் ; முதல்வனே அருளாய் ;
முன்னவா, துயர்கெடுத் தெனக்கே.