திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே!
அணிதில்லை நகராளீ!
சிலந்தி யைஅர சாள்கஎன் றருள்செய்த
தேவதே வீசனே
உலர்ந்த மார்க்கண்டிக் காகிஅக் காலனை
உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
வந்தருள் செய்யாயே.

பொருள்

குரலிசை
காணொளி