திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்று இடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்.