திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா!
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடைய சோதீ!
திருத்தம் ஆம் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி