திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும்,
விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்;
திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி