பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி, உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.