பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் விடகிலா; ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் இடை இலேன்; என் செய்கேன், நான்? இரப்பவர் தங்கட்கு என்றும் கொடை இலேன்; கொள்வதே, நான்! கோவல் வீரட்டனீரே!