பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும் உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்; பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்; எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே!