பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும் இல்லேன்! தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த இளையனும் அல்லேன்; எந்தாய்!-என் செய்வான் தோன்றினேனே!