உறவாகிய யோகமும் போகமுமாய்
உயிராளீ !’ என்னும்என் பொன் : ‘ஒருநாள்,
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்று நின்ற
மறவா ! ’ என் னும்; மணி நீரருவி
மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா ! ’ என் னும் ; ‘குணக் குன்றே ! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே