‘வேறாக, உள்ளத் துவகைவிளைத்
தவனச் சிவலோக, வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்,
எனையும் மகிழ்ந்தாள வல்லாய்! ’ என்னும்;
‘ஆறார் சிகர மகேந்திரத்துன்
அடியார் பிழைபொறுப் பாய்! அமுதோர்
கூறாய்! ’என் னும்; ‘குணக் குன்றே!’ என்னும் ;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.