கானே வருமுரண் ஏனம் எய்த
களிஆர் புளினநற் காளாய்! ’ என்னும்;
‘வானே தடவு நெடுங் குடுமி
மகேந்திர மாமலை மேல்இ ருந்த
தேனே ! ’ என்னும் தெய்வ வாய்மொழியார்
திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே ! ’என் னும் ‘குணக் குன்றே ! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே