சேவேந்து வெல்கொடி யானே ! ’என்னும்;
‘சிவனே! என் சேமத் துணையே !’ என்னும்:
‘மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
வளர்நாய கா ! இங்கே வாராய் ’ என்னும்;
பூவேந்தி மூவா யிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே! என் னும், ‘குணக் குன்றே!’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.