திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல்,
திரைவீரை, தீங்குழல், சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாட வாடும்
எனைநீ நலிவதென் ! என்னே ! ’ என்னும் ;
‘அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
கரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே! ’ என்னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் ;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

பொருள்

குரலிசை
காணொளி