‘வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
விசயற் கருள்செய்த வேந்தே ! என்னும்;
‘மறியேறு சாரல் மகேந்திரமா
மலைமேல் இருந்த மருந்தே என்னும்;
நெறியே ! ’என் னும்; ‘நெறி நின்ற வர்கள்
நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே ! ’ என் னும்; ‘ குணக் குன்றே! ’ என்னும்;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.