‘கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
சிலையும், கணையும், கவணும் கைக்கொண்
டுடுப்பாய தோல் செருப் புச், சுரிகை
வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
‘நடப்பாய் ! மகேந்திர நாத ! நாதாந்தத்
தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
கொடுப்பாய் !’ என் னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.