திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

பை அரவு அசைத்த அல்குல், பனி நிலா எறிக்கும் சென்னி
மை அரிக் கண்ணினாளும் மாலும் ஓர் பாகம் ஆகி,
செய் எரித் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல்- எரி ஆடும் ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி