திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி
இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி