திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப்
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து அருளும் பெருமை கேட்டுத்
திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத் தொண்டர் ஓடிச் சென்று அங்கு
உருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார்.