திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி
மண்டு பேர் அன்பால் மண்மிசைப் பணிந்து ‘மங்கையர்க்கரசி’ என்று எடுத்தே
‘எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே’ என்று இருவர் தம் பணியும்
கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற.